கனிமொழி ஜாமீனில் வெளியே வந்து விட்டார். இந்த சூழ்நிலையில், இனி அவர் என்ன செய்ய போகிறார்? கட்சி அவருக்கு என்ன செய்யப் போகிறது? இது தான் இன்றைக்கு "Talk of the Tamilnadu". உடன்பிறப்புகளை தாண்டி, ஒவ்வொரு அரசியல் ஆர்வலரும் ஆவலோடு எதிர் நோக்கும் கேள்வி இவைதான்.
இந்த நேரத்தில் கட்சியின் உறுப்பினராய் தலைமைக்கும், சக உடன்பிறப்பாய் கனிமொழி அக்காவுக்கும் என் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டியது என் தார்மீக கடைமை.
முதலில் தலைமைக்கு :
இப்பொழுது கனிமொழி அக்காவை நீங்கள் அமைச்சராக்க வேண்டாம். கட்சியின் பெரிய பொறுப்புகளை அவர் தலைமையில் சுமத்த வேண்டாம். அதே நேரத்தில் அவர் இப்பொழுது வகிக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பறித்த்துவிடவும் வேண்டாம். இப்பொழுது மட்டுமல்ல, இனி எப்போதும் தயவு செய்து அவருக்கென்று ஒரு ராஜ்யசபா சீட்டை நிரந்தரமாக ஒதுக்கி விடுங்கள். அவரைப் போல் சுய சிந்தனை உள்ள, கொள்கை பிடிப்பு கொண்ட, ஆங்கிலப் புலமை மிக்க ஒரு குரல் தலைநகரில் ஒலிக்க வேண்டியது கட்டாயத் தேவை.
இனி கனிமொழிக்கு :
அன்பு அக்காவுக்கு, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். உங்கள் மீதிருக்கும் வழக்கு முடியும் வரை அதைப் பற்றி நான் பேசப் போவதில்லை. நடந்தது என்ன என்பதை விரைவில் இந்த நாடே அறியும். இதுவரை எப்படி இருந்தீர்களோ தெரியாது, இனி நீங்கள் உங்கள் பாதையை தெளிவாக வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். முன்பு நீங்கள் இலக்கியத் தடத்தில் இருந்தபோது, அரசியல் தடத்தில் உங்கள் பார்வையை செலுத்தியதில்லை. அரசியல் தடத்தில் நுழைந்த போது, இலக்கியத் தடத்தை திரும்பிப் பார்த்ததில்லை. இதுவரை எப்படி இருந்தீர்களோ பரவாயில்லை, இனி தயவு செய்து இரண்டு பாதையிலும் பயணம் செய்யுங்கள். இலக்கியத்தில் அரசியல் பேசுங்கள், அரசியலில் இலக்கியம் வெளிப் படட்டும். நாடாளுமன்ற விவாதங்களில் மட்டுமின்றி CNN,NDTV போன்ற ஆங்கிலச் சேனல்களில் நடைபெறும் விவாதங்களிலும் திராவிட பிரதிநிதியாக கலந்துக் கொள்ளுங்கள்(முன்பைவிட தீவிரமாய்). நீங்கள் முன்பு மேற்கொண்ட தமிழ் கலைகளை வளர்க்கும் முயற்சிகளையிம் கைவிட்டு விடாதீர்கள். முடிந்தால் இணையதளங்களிலும் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்.
லட்சக்கணக்கான உடன் பிறப்புகள் சார்பாக
இ.அருண்மொழிதேவன்.
இந்த நேரத்தில் கட்சியின் உறுப்பினராய் தலைமைக்கும், சக உடன்பிறப்பாய் கனிமொழி அக்காவுக்கும் என் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டியது என் தார்மீக கடைமை.
முதலில் தலைமைக்கு :
இப்பொழுது கனிமொழி அக்காவை நீங்கள் அமைச்சராக்க வேண்டாம். கட்சியின் பெரிய பொறுப்புகளை அவர் தலைமையில் சுமத்த வேண்டாம். அதே நேரத்தில் அவர் இப்பொழுது வகிக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பறித்த்துவிடவும் வேண்டாம். இப்பொழுது மட்டுமல்ல, இனி எப்போதும் தயவு செய்து அவருக்கென்று ஒரு ராஜ்யசபா சீட்டை நிரந்தரமாக ஒதுக்கி விடுங்கள். அவரைப் போல் சுய சிந்தனை உள்ள, கொள்கை பிடிப்பு கொண்ட, ஆங்கிலப் புலமை மிக்க ஒரு குரல் தலைநகரில் ஒலிக்க வேண்டியது கட்டாயத் தேவை.
இனி கனிமொழிக்கு :
அன்பு அக்காவுக்கு, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். உங்கள் மீதிருக்கும் வழக்கு முடியும் வரை அதைப் பற்றி நான் பேசப் போவதில்லை. நடந்தது என்ன என்பதை விரைவில் இந்த நாடே அறியும். இதுவரை எப்படி இருந்தீர்களோ தெரியாது, இனி நீங்கள் உங்கள் பாதையை தெளிவாக வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். முன்பு நீங்கள் இலக்கியத் தடத்தில் இருந்தபோது, அரசியல் தடத்தில் உங்கள் பார்வையை செலுத்தியதில்லை. அரசியல் தடத்தில் நுழைந்த போது, இலக்கியத் தடத்தை திரும்பிப் பார்த்ததில்லை. இதுவரை எப்படி இருந்தீர்களோ பரவாயில்லை, இனி தயவு செய்து இரண்டு பாதையிலும் பயணம் செய்யுங்கள். இலக்கியத்தில் அரசியல் பேசுங்கள், அரசியலில் இலக்கியம் வெளிப் படட்டும். நாடாளுமன்ற விவாதங்களில் மட்டுமின்றி CNN,NDTV போன்ற ஆங்கிலச் சேனல்களில் நடைபெறும் விவாதங்களிலும் திராவிட பிரதிநிதியாக கலந்துக் கொள்ளுங்கள்(முன்பைவிட தீவிரமாய்). நீங்கள் முன்பு மேற்கொண்ட தமிழ் கலைகளை வளர்க்கும் முயற்சிகளையிம் கைவிட்டு விடாதீர்கள். முடிந்தால் இணையதளங்களிலும் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்.
"தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்"
படைக்கு அஞ்சான்"
லட்சக்கணக்கான உடன் பிறப்புகள் சார்பாக
இ.அருண்மொழிதேவன்.
No comments:
Post a Comment