Sunday 22 January 2012

நன்பன் படத்தை விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?


* படத்தின் தலைப்பு மக்கள் நன்பன் என்று இருந்திருக்கும்.

* விஜய் அறிமுக காட்சி சீனியர்களுடனான ஃபைட்டுடன் துவங்கியிருக்கும். ஃபைட் முடிந்ததும், ரேகிங் செய்வது தப்பு என்று பஞ்ச் டயலாக் பேசியிருப்பார்.

* ஃபைட் முடிந்த்தும் கபிலன் எழுதிய அறிமுக பாடலுக்கு விஜய் நடன‌ம் ஆடியிருப்பார்.

* பாடல் காட்சியில், கல்லூரியில் எடுபிடி வேலை செய்யும் சிறுவனுக்கோ(மில்லி மீட்டர்) இல்லை வயதான ஒருஆயாவுக்கோ முத்தம் கொடுத்திருப்பார்.
* சத்யன் தனது அலுவலகத்துக்காக தமிழக முதல்வரிடம்(விஞ்ஞானிக்குப் பதிலாக) கையெழுத்து வாங்க வந்திருப்பார்.

* ஜீவா மாடியில் இருந்து குதித்தவுடன் கோமாவுக்கு சென்றிருப்பார். அந்த கோமா பத்து ஆண்டுகள் வரை அப்படியே தொடர்ந்திருக்கும்.

* ஸ்ரீகாந்த் பத்து ஆண்டுகளாக காடுகளியே சுற்றிக் கொண்டிருந்திருப்பார்.

* கல்லூரி முதல்வர் சத்யராஜ் அரசியல் பின்னனி கொண்டவராக இருந்திருப்பார்.

* கடைசியில் சத்யன் கையெழுத்து வாங்க வந்த முதல்வராக டாக்டர்.விஜய் இருந்திருப்பார்

No comments:

Post a Comment