Friday 19 August 2011

முதல்வருக்குச் சில கேள்விகள்



* புதிய கட்டிடத்தில் எந்த நேரத்தில் எது இடிந்து விழுமோ? என தெரியாது. எனவே அந்த கட்டிடத்தில் தலைமைச் செயலகம் அமைக்க முடியாது என்று சொன்ன அம்மையார் அவர்களே! இப்பொழுது அந்த கட்டிடத்தில் நோயாளிகள் தங்கினால் மட்டும் இடிந்து விழாதா?

* அந்த கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளது எனக் கூறி கட்டுமானத்தை நிறுத்தி வைத்து நீதிபதி தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தீர்களே! அது ஏன்?

* நீங்கள் கடந்த ஆட்சியிலேயே புதிய சட்டமன்றம் கட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியை இடிக்க போனீர்கள்.கேட்டால் ஜார்ஜ் கோட்டையில் விரிசல் என்றீர்கள்! வாடகைக் கட்டிடம் என்றீர்கள்! எப்படி பார்த்தாலும் சட்டமன்றத்திற்கு புதிய கட்டிடம் என்பது அவசியமாகிறது. எனவே நீங்கள் மீண்டும் ஒரு புதிய தலைமைச் செயலகம் கட்டபோகிறீர்களா?