Thursday 22 September 2011

எங்கேயும் எப்போதும் - துளிகள்

* இயக்குனர் சங்கர் தனது முதல் தயாரிப்பான "காதல்" படத்தில் தந்த அதிர்ச்சியை விட அதிகமான அதிர்சியைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது முதல் தயாரிப்பில்.

* சில படங்களைப் பார்க்கும் பொழுது "என்ன கொடுமை சரவணன் இது?" என்று கமெண்ட் அடிக்கத் தோன்றும். ஆனால் இந்தப் படத்தை இயக்கியவரின்  பெயர் சரவணனாகவே இருந்தாலும் "Hats Off சரவணன்" என்றே சொல்லத் தோன்றுகிறது.

* இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும், குறைந்தப் பட்சம் வீட்டிற்குச் செல்லும் வரையாவது சாலை விதிகளை மதிப்பார்கள் என்பது சத்தியம்.

* இந்தப் படத்தில் "அஞ்சலி" நடக்க வேண்டியக் கேரக்டரில், முதலில் "அமலாபால்"தான் நடிப்பதாக இருந்தது. சிலப் பிரச்சனைகளால்தான் "அஞ்சலி" கதாநாயகியானார். இப்பொழுது "அஞ்சலி"யின் நடிப்பைப் பார்த்தப் பின் அந்த இடத்தில் வேறொரு நடிகையை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

* "எங்கேயும் எப்போதும்" படத்தில் "எங்கேயும் எப்போதும்" நம்மை ஈர்த்துக் கொண்டிருப்பவர்கள் கேமிராமேன் வேல்ராஜ் மற்றும் இசையமைப்பாளர் சத்யா. இயக்குனரின் கதையை கவிதையாக்கியப் பெருமை இவர்களையேச் சேரும்.