Tuesday 19 July 2011

2000வது டெஸ்ட்

                        இன்றைக்கு கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போட்டி,  ஜீலை 21ம் தேதி தொடங்க இருக்கும் இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டிதான். சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2000வது டெஸ்ட் என்ற சிறப்பு ஒரு புறம் இருக்க, முன்னாள், இந்நாள் வீரர்கள் ஊடகங்களில் கொடுத்துக் கொண்டிருக்கும் பேட்டிகள் ஒரு புறம் பரபரப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. போதாக் குறைக்கு சச்சின் தனது நூறாவது சர்வதேச சதத்தை, இதுவரை ஒருமுறைக்கூட சதம் அடிக்காத புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு வேறு இதயத்துடிப்பை டரியலாக்கிக் கொண்டிருக்கிறது. பொறுத்திருந்துப் பார்ப்போம் ஜெயிக்கப் போவது கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப் படுத்திய  இங்கிலாந்தா? இல்லை கிரிக்கெட்டை அங்கீகரிக்கபடாத மதமாக கொண்டாடும் இந்தியாவா? என்று.

Monday 11 July 2011

வேங்கை

பாரதிராஜாவுக்கு "மண்வாசனை" என்றால் ஹரிக்கு "ரத்தவாசனை".தன் அக்மார்க் ரத்தம்+அருவா டிரேடுடன் ஹரி கொடுத்திருக்கும் படம் "வேங்கை".அருவா,டாட்டாசுமோ,குவாலிஸ் வகையறா கார்கள் இல்லாமல் தன்னால் படம் எடுக்க முடியாது என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் இயக்குனர்."கோவக்காரன் அருவா எடுத்தா தப்பு.காவக்காரன் அருவா எடுத்தா தப்பு இல்ல" இதுதான் படத்தோட ஒன் லைன்.இப்படிதான் எல்லா பேட்டியிலும் சொல்லி பில்டப் குடுத்தார் ஹரி.படம் பாத்த எனக்கு அந்த ஒன்லைன் சுத்தமா வெளங்கவே இல்லை.படத்தின் கதை பெரிசா ஒன்னும் இல்லை.
சிவகங்கை பக்கத்துல உள்ள ஒரு சின்ன கிராமத்தோட பெரிய மனுசன் "ராஜ்கிரண்".அவர் சொன்னா அந்த ஊர் மட்டும் இல்ல சுத்து வட்டாரத்துல எல்லா ஊர் மக்களும் கேப்பாங்க.அப்படி அவர் சொல்லி தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜெயித்த எம்.எல்.ஏ வாய் பிரகாஷ்ராஜ்.பிரகாஷ்ராஜ் எம்.எல்.ஏ வாக இருந்தாலும் ராஜ்கிரணின் அனுமதியின்றி எந்த திட்டத்தையோ,டெண்டரையோ நிறைவேற்ற முடியாது.இதானால கடுப்பாயி அவர போட்டுத்தள்ள நினைப்பார்.அது கஷ்டம்ங்கிறதால "ஊரில் இருந்தால் கெட்டுப்போயிடுவான்" என்பதால் ராஜ்கிரணால் திருச்சிக்கு அனுப்பப் பட்ட அவரது மகன் தனுஷை போட்டுத் தள்ள முடிவேடுப்பார் பிரகாஷ்ராஜ்.அது முடியாமல் போய்விடும்.சில திருப்பங்களுக்குப் பிறகு அமைச்சராகிவிட்ட பிரகாஷ்ராஜ் ராஜ்கிரண் தலையை எடுக்க நினைப்பார்.இது தெரிந்த தனுஷ் பிரகாஷ்ராஜ் தலையை எடுப்பதாக சவால்விடுவார்.கடைசியில் யார்தலையை யார் எடுத்தார் என்பதுதான் கிளைமாக்ஸ்.சொல்ல மற்ந்துட்டேன் இடையில் தம்ன்னாவுடன் காதல் வேறு உண்டு.

மொத்தத்தில் சண்டை,காதல்,காமெடி,செண்டிமென்ட்,பஞ்ச்டயலாக் என காக்டெயிலாக வெளிவந்திருக்கும் அக்மார்க் கமர்ஷியல் திரைப்படம். கமர்ஷியல் திரைப்படம் எனும்போது லாஜிக்கெல்லாம் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாது. அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கில்லை. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள்,பிண்ணனி இசை எல்லாமே சுமார் ரகம்தான். எல்லாப் பாடல்களிலும் தெலுங்கு வாசனை வீசுகிறது.நடிப்பைப் பொறுத்தவரை தனுஷ் மட்டும் தான் இம்ப்ரஸ் செய்கிறார். பட் தனுஷைவிட விஷால் நடித்திருந்தால் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருந்திருப்பார். ராஜ்கிரண்,பிரகாஷ்ராஜ் போன்ற ஜாம்பவான்கள் கூட ஏற்கனவே பலமுறை நடித்த பாத்திரங்களிலேயே நடித்திருப்பதால் பெரிதாக என்னை இம்ப்ரஸ் செய்யவில்லை.இரண்டு காட்சிகளில் மட்டுமே தலைக்காட்டியிருந்தாலும் ஒய்.ஜி.மகேந்திரனின் முகபாவனை அருமை. திறமையான ஒரு நடிகரை வேஸ்ட் செய்துவிட்டார்கள்.தமன்னாவுக்கு இந்தப் படத்தில் காதலிப்பதை விட அதிகமாக அழுவதுதான் வேலை.காமெடியைப் பொறுத்தவரை கஞ்சாகருப்பு வரும் காட்சிகளைவிட பொன்னம்பலம் வரும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கிறது. பிரகாஷ்ராஜ் கோபத்தில் ஒவ்வொரு செல்போனாக உடைக்கும் காட்சிகள் சுவாரஸ்யம். படத்தில் பல காட்சிகள் குறிப்பாக பிரகாஷ்ராஜ் வரும் காட்சிகள் ஹரியின் முந்தைய படத்தை ஞாபகப் படுத்துகின்றன.இருந்தாலும் ஹரியின் விருவிருப்பான திரைக்கதை அவற்றை மறக்கடித்து விடுகிறது.

கடைசியா திருச்சிக்காரனான எனக்கு ஒரு சந்தேகம் "திருச்சியை மையப்படுத்தி எடுக்கும் எல்லாப் படங்களிலும் ஹீரோயினை ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவராகவே காட்டுவது ஏன்?"

Wednesday 6 July 2011

திருவனந்த புரம் பத்மநாப சாமி


திருவனந்த புரம் பத்மநாப சாமி கோயிலில் கிடைத்த புதையலை என்னச் செய்யலாம்?அரசு கஜானாவில் சேர்க்கலாமா?கண்டிப்பாகக் கூடாது. திருவாங்கூர் மன்னர் குடும்பத்திடம் ஒப்படைக்கலாமா?ம்ம்கூம் கூடவே கூடாது. வேறு என்னதான் செய்யலாம்?முதலில் பத்மநாப சாமி பெயரில் ஒரு அறக்கட்டளைத் துவங்க வேண்டும்(வேண்டுமென்றால் இதில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கலாம்).இந்த அறக்கட்டளை இப்பொழுது கிடைத்திருக்கும் பொக்கிசத்தை பாதுகாக்க மட்டும் அல்ல. இனி வரப் போகும் வருமானத்தையிம் முறைப்படுத்த.எப்படியிம் இப்ப ஒரு நாளைக்கு 500பேர் வந்துக்கிட்டுருந்தா.. இனிமே  குறைந்தது 2500பேராவது வருவாங்க(பத்மநாப சாமிக்கு கெடச்சிருக்குற பப்ளிகுட்டி அப்படி).அடுத்த‌து இப்பொழுது கிடைத்திருக்கும் விலைமதிப்பில்லாப் பொருட்களை புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளுக்குப் பிறகு அருங்காட்சியகம் அமைத்துப் பாதுகாக்க வேண்டும்.ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, உபரியாக இருக்கும் நாணயங்கள் மற்றும் பொருட்களை(உதாரணத்திற்கு ஒரேக் காலத்தைச் சேர்ந்த, ஒரே மதிப்புடைய, ஒரே வடிவமுடைய நாணயங்கள் 1000 இருப்பின் அவற்றில் பத்தை மட்டும் வைத்துக் கொண்டு மீதியை) ஏலம் விட்டு அந்த வருமானத்தையிம் கோவில் திருப்பணிகளுக்கும், மக்கள் நலப்பணிகளுக்கும் செலவிடலாம்.

தைரியமான தமிழன்



என்றைக்குத் தான் இந்த வீரம் தமிழ்நாட்டுத் தமிழனுக்கு வாய்க்குமோ?

Tuesday 5 July 2011

ஒரு மகிழ்சி

சென்ற வாரத்தில் நான் செய்த,என் மனதுக்கு மகிழ்சியளித்த ஒரே விஷயம் சென்னை எத்திராஜ் கல்லூரியில் படிக்கும் என் தோழிக்கு, அவள் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக கட்டுரைகள் தயார் செய்து கொடுத்ததுதான். கட்டுரைகளின் தலைப்பு "கொடைவள்ளல் எத்திராஜ்" மற்றும் "தலைவர் நீங்கள் நீங்கள்தான்"(பெருந்தலைவர் காமராஜர் பற்றியது).நான் பள்ளிநாட்களிலும்,பின்னரும் விரல்விட்டு எண்ணக் கூடிய‌ மேடைகளில் பேசியிருக்கிறேன் பரிசும் பெற்றிருக்கிறேன்.ஆனாலும் இப்பொழுது எழுதியக் கட்டுரைக்கு அவள் கொஞ்சும் தமிங்கிலிஸில் சொன்ன "Thanks நல்லாருக்கு" என்ற வார்த்தைக்கு ஈடான பரிசைப் பெற்றதில்லை.அவள் நன்றாக பேச என் வாழ்த்துக்கள்.

தொடக்கம்


வெனிசுவேலா,அல்ஜீரியா ,கேப் வேர்ட் விடுதலை பெற்ற நாளில்
ஆர்மீனியா அரசியலமைப்பு தினத்தில்
தமிழீழ கரும்புலிகள் தினத்தில்
இந்த வலைப்பூவும் தொடங்கப் பட்டது