Thursday 8 November 2012

சமீபத்திய அதிர்ச்சி

சமீபகாலமாக கல்லூரி மாணவர்களுடன் அதிகம் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்பொழுது என்னை அதிர்சியடைய வைத்த சில உண்மைகள்

* பி.ஏ ஆங்கில இலக்கியம்(3ம் ஆண்டு) படித்து கொண்டிருக்கும் மாணவிக்கு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை.

* பி.ஏ ஆங்கில இலக்கியம்(3ம் ஆண்டு) படித்து கொண்டிருக்கும் மாணவனுக்கு "செங்கழுநீர் ஓடை" என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்ததை எழுத்துக்கூட்டிக் கூட வாசிக்கத் தெரியவில்லை.

* பி.காம் பொருளாதரம்(2ம் ஆண்டு) படிதுக் கொண்டிருக்கும் மாணவனுக்கு அமர்த்தியா சென் யாரென்று தெரியவில்லை.

* கொல்கத்தா எந்த மாநிலத்தில் இருக்கிறது என்று, (அப்பொழுது) உடன் இருந்த 8 கல்லூரி மாணவர்களுக்கும் தெரியவில்லை.

Tuesday 28 February 2012

திடாவிடர் என்பதில் பெருமிதம் கொள்வோம்

நான் திராவிடன் என்று உணர்வதில் பெருமை கொள்கிறேன். இதே பெருமித உணர்வு உங்களுக்கும் இருப்பின், தமிழ் மண் உலகுக்கு தந்த மாபெரும் சித்தாந்த கோட்பாடான திராவிடத்தின் நூற்றாண்டினை கொண்டாடுங்கள். கொண்டாட்டத்தின் அடையாளமாக ஃபேஸ்புக் திராவிடத் தோழர்கள் தயாரித்துத் தந்திருக்கும் கீழ்க்கண்ட இலச்சினையை உங்கள் வலைப்பூவிலோ, ட்விட்டர்,  ஃபேஸ்புக் மாதிரி சமூக வலைப் பின்னல்களிலேயோ பயன்படுத்துங்கள்.

Sunday 22 January 2012

நன்பன் படத்தை விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?


* படத்தின் தலைப்பு மக்கள் நன்பன் என்று இருந்திருக்கும்.

* விஜய் அறிமுக காட்சி சீனியர்களுடனான ஃபைட்டுடன் துவங்கியிருக்கும். ஃபைட் முடிந்ததும், ரேகிங் செய்வது தப்பு என்று பஞ்ச் டயலாக் பேசியிருப்பார்.

* ஃபைட் முடிந்த்தும் கபிலன் எழுதிய அறிமுக பாடலுக்கு விஜய் நடன‌ம் ஆடியிருப்பார்.

* பாடல் காட்சியில், கல்லூரியில் எடுபிடி வேலை செய்யும் சிறுவனுக்கோ(மில்லி மீட்டர்) இல்லை வயதான ஒருஆயாவுக்கோ முத்தம் கொடுத்திருப்பார்.
* சத்யன் தனது அலுவலகத்துக்காக தமிழக முதல்வரிடம்(விஞ்ஞானிக்குப் பதிலாக) கையெழுத்து வாங்க வந்திருப்பார்.

* ஜீவா மாடியில் இருந்து குதித்தவுடன் கோமாவுக்கு சென்றிருப்பார். அந்த கோமா பத்து ஆண்டுகள் வரை அப்படியே தொடர்ந்திருக்கும்.

* ஸ்ரீகாந்த் பத்து ஆண்டுகளாக காடுகளியே சுற்றிக் கொண்டிருந்திருப்பார்.

* கல்லூரி முதல்வர் சத்யராஜ் அரசியல் பின்னனி கொண்டவராக இருந்திருப்பார்.

* கடைசியில் சத்யன் கையெழுத்து வாங்க வந்த முதல்வராக டாக்டர்.விஜய் இருந்திருப்பார்