Sunday 6 November 2011

கலைஞர் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மந்திரி பதவி வாங்க‌ மட்டும் டெல்லிக்கு நேரில் சென்றார், ஈழப்பிரச்சினைக்கு கடிதம் மட்டும் எழுதினார் என்ற குற்றச்சாட்டுப் பற்றி?

ஈழப் பிரச்சினைத் தொடர்பாக நேரில் சென்றிருந்தாலும் கலைஞரால் ஒன்றும் செய்திருக்க முடியாது. மாறாக தமிழகத்தில் தன் ஆட்சியை இழந்திருப்பார், அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும். மத்திய அரசில் தமிழகத்துக்கான பிரதிநுவத்துவம் குறைந்திருக்கும். இதை எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறேன் என்றால் அதே 2009ல் 59நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இடதுசாரிகள், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமரையிம், சோனியாவையிம் நேரில் சென்று பார்த்தார்கள், ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் கடைசியில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டார்கள். ஆனால் கடைசியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு வேளை கலைஞர் அந்த நேரத்தில் மத்திய அரசை மிரட்டி ஆட்சியை ஜெயலலிதாவிடம் தாரை வார்த்துக் கொடுத்திருந்தால் இன்றைக்கு கலைஞரை இனத்துரோகி என விமர்சிக்கும் தமிழ் தேசியவாதிகள் அன்றைக்கு சுதந்திரமாக வெளியில் நடமாடியிருக்கக் கூட முடியாது!.

கலைஞரின் உண்ணாவிரதம் ஒரு நாடகம் என்று சொல்வதைப் பற்றி?

அந்த உண்ணாவிரதத்தைப் பற்றி ஜெயலலிதா சொல்லும் போதெல்லாம் "காலை உணவை சாப்பிட்டு விட்டு வந்து உண்ணாவிரதம் இருந்தார், மதிய உணவுக்கு முன்பாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்" என்று கிண்டல் செய்வார். ஆனால் அந்த காலக்கட்டங்களில் அவரால் பாதி மசால்வடைக் கூட சாப்பிட முடியாது . மூன்று வேளையிம் வெறும் கஞ்சி மட்டும்தான் உண்டு வந்தார். அவர் எப்பொழுதும் காலை உணவை சாப்பிடுவது அண்ணா அறிவாலயத்திற்கு சென்று வந்த பின்புதான் ஆனால் அன்றைக்கு அறிவாலயம் செல்வதாய் சொல்லிவிட்டு சென்றவர் பாதி வழியிலேயே வண்டியை அண்ணா நினைவிடத்துக்கு திருப்பச் சொல்லி உண்ணாவிரதத்தில் அமர்ந்து விட்டார். மதியம் போரை நிறுத்துவதாய் மத்திய அரசிடம் இலங்கை அரசு கூறிய பிறகுதான் உண்ணாவிரத்தை வாபஸ் வாங்கினார். அதைப் போல அடுத்த ஒரு வாரத்திற்கு பெரிதாக இலங்கை அரசு யுத்தத்தில் ஈடுபடவில்லை. பின்பு அந்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறியது வேறு விஷயம். இது "கலைஞரின் பேச்சை நம்பி அப்பாவி மக்கள் பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்ததனால்தான் இறந்தார்கள்" என்று சொல்பவர்களுக்கும் பொறுந்தும். இதில் அவர்களின் விமர்சணத்தில் உள்ள ஒரு பிழை என்னவென்றால் கலைஞரின் பேச்சை நம்பி யாரும் பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்திருக்க வாய்பில்லை. ஒரு வாரமாய் குண்டு சத்தம் இல்லாததால்தான் வெளியே வந்திருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் பதுங்கு குழியில் தொலைக்காட்சி, ரேடியோ போன்ற வசதிகள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

கடைசியில் சொல்ல வருவது?
கலைஞர் இனத்துரோகி இல்லை. காங்கிரஸ் என்ற பசுந்தோல் போர்த்திய புலியிடம் ஏமாந்த வயதானக் காளை.

No comments:

Post a Comment