Wednesday 6 July 2011

திருவனந்த புரம் பத்மநாப சாமி


திருவனந்த புரம் பத்மநாப சாமி கோயிலில் கிடைத்த புதையலை என்னச் செய்யலாம்?அரசு கஜானாவில் சேர்க்கலாமா?கண்டிப்பாகக் கூடாது. திருவாங்கூர் மன்னர் குடும்பத்திடம் ஒப்படைக்கலாமா?ம்ம்கூம் கூடவே கூடாது. வேறு என்னதான் செய்யலாம்?முதலில் பத்மநாப சாமி பெயரில் ஒரு அறக்கட்டளைத் துவங்க வேண்டும்(வேண்டுமென்றால் இதில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கலாம்).இந்த அறக்கட்டளை இப்பொழுது கிடைத்திருக்கும் பொக்கிசத்தை பாதுகாக்க மட்டும் அல்ல. இனி வரப் போகும் வருமானத்தையிம் முறைப்படுத்த.எப்படியிம் இப்ப ஒரு நாளைக்கு 500பேர் வந்துக்கிட்டுருந்தா.. இனிமே  குறைந்தது 2500பேராவது வருவாங்க(பத்மநாப சாமிக்கு கெடச்சிருக்குற பப்ளிகுட்டி அப்படி).அடுத்த‌து இப்பொழுது கிடைத்திருக்கும் விலைமதிப்பில்லாப் பொருட்களை புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளுக்குப் பிறகு அருங்காட்சியகம் அமைத்துப் பாதுகாக்க வேண்டும்.ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, உபரியாக இருக்கும் நாணயங்கள் மற்றும் பொருட்களை(உதாரணத்திற்கு ஒரேக் காலத்தைச் சேர்ந்த, ஒரே மதிப்புடைய, ஒரே வடிவமுடைய நாணயங்கள் 1000 இருப்பின் அவற்றில் பத்தை மட்டும் வைத்துக் கொண்டு மீதியை) ஏலம் விட்டு அந்த வருமானத்தையிம் கோவில் திருப்பணிகளுக்கும், மக்கள் நலப்பணிகளுக்கும் செலவிடலாம்.

No comments:

Post a Comment