Tuesday 5 July 2011

ஒரு மகிழ்சி

சென்ற வாரத்தில் நான் செய்த,என் மனதுக்கு மகிழ்சியளித்த ஒரே விஷயம் சென்னை எத்திராஜ் கல்லூரியில் படிக்கும் என் தோழிக்கு, அவள் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக கட்டுரைகள் தயார் செய்து கொடுத்ததுதான். கட்டுரைகளின் தலைப்பு "கொடைவள்ளல் எத்திராஜ்" மற்றும் "தலைவர் நீங்கள் நீங்கள்தான்"(பெருந்தலைவர் காமராஜர் பற்றியது).நான் பள்ளிநாட்களிலும்,பின்னரும் விரல்விட்டு எண்ணக் கூடிய‌ மேடைகளில் பேசியிருக்கிறேன் பரிசும் பெற்றிருக்கிறேன்.ஆனாலும் இப்பொழுது எழுதியக் கட்டுரைக்கு அவள் கொஞ்சும் தமிங்கிலிஸில் சொன்ன "Thanks நல்லாருக்கு" என்ற வார்த்தைக்கு ஈடான பரிசைப் பெற்றதில்லை.அவள் நன்றாக பேச என் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment