Monday 11 July 2011

வேங்கை

பாரதிராஜாவுக்கு "மண்வாசனை" என்றால் ஹரிக்கு "ரத்தவாசனை".தன் அக்மார்க் ரத்தம்+அருவா டிரேடுடன் ஹரி கொடுத்திருக்கும் படம் "வேங்கை".அருவா,டாட்டாசுமோ,குவாலிஸ் வகையறா கார்கள் இல்லாமல் தன்னால் படம் எடுக்க முடியாது என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் இயக்குனர்."கோவக்காரன் அருவா எடுத்தா தப்பு.காவக்காரன் அருவா எடுத்தா தப்பு இல்ல" இதுதான் படத்தோட ஒன் லைன்.இப்படிதான் எல்லா பேட்டியிலும் சொல்லி பில்டப் குடுத்தார் ஹரி.படம் பாத்த எனக்கு அந்த ஒன்லைன் சுத்தமா வெளங்கவே இல்லை.படத்தின் கதை பெரிசா ஒன்னும் இல்லை.
சிவகங்கை பக்கத்துல உள்ள ஒரு சின்ன கிராமத்தோட பெரிய மனுசன் "ராஜ்கிரண்".அவர் சொன்னா அந்த ஊர் மட்டும் இல்ல சுத்து வட்டாரத்துல எல்லா ஊர் மக்களும் கேப்பாங்க.அப்படி அவர் சொல்லி தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜெயித்த எம்.எல்.ஏ வாய் பிரகாஷ்ராஜ்.பிரகாஷ்ராஜ் எம்.எல்.ஏ வாக இருந்தாலும் ராஜ்கிரணின் அனுமதியின்றி எந்த திட்டத்தையோ,டெண்டரையோ நிறைவேற்ற முடியாது.இதானால கடுப்பாயி அவர போட்டுத்தள்ள நினைப்பார்.அது கஷ்டம்ங்கிறதால "ஊரில் இருந்தால் கெட்டுப்போயிடுவான்" என்பதால் ராஜ்கிரணால் திருச்சிக்கு அனுப்பப் பட்ட அவரது மகன் தனுஷை போட்டுத் தள்ள முடிவேடுப்பார் பிரகாஷ்ராஜ்.அது முடியாமல் போய்விடும்.சில திருப்பங்களுக்குப் பிறகு அமைச்சராகிவிட்ட பிரகாஷ்ராஜ் ராஜ்கிரண் தலையை எடுக்க நினைப்பார்.இது தெரிந்த தனுஷ் பிரகாஷ்ராஜ் தலையை எடுப்பதாக சவால்விடுவார்.கடைசியில் யார்தலையை யார் எடுத்தார் என்பதுதான் கிளைமாக்ஸ்.சொல்ல மற்ந்துட்டேன் இடையில் தம்ன்னாவுடன் காதல் வேறு உண்டு.

மொத்தத்தில் சண்டை,காதல்,காமெடி,செண்டிமென்ட்,பஞ்ச்டயலாக் என காக்டெயிலாக வெளிவந்திருக்கும் அக்மார்க் கமர்ஷியல் திரைப்படம். கமர்ஷியல் திரைப்படம் எனும்போது லாஜிக்கெல்லாம் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாது. அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கில்லை. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள்,பிண்ணனி இசை எல்லாமே சுமார் ரகம்தான். எல்லாப் பாடல்களிலும் தெலுங்கு வாசனை வீசுகிறது.நடிப்பைப் பொறுத்தவரை தனுஷ் மட்டும் தான் இம்ப்ரஸ் செய்கிறார். பட் தனுஷைவிட விஷால் நடித்திருந்தால் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருந்திருப்பார். ராஜ்கிரண்,பிரகாஷ்ராஜ் போன்ற ஜாம்பவான்கள் கூட ஏற்கனவே பலமுறை நடித்த பாத்திரங்களிலேயே நடித்திருப்பதால் பெரிதாக என்னை இம்ப்ரஸ் செய்யவில்லை.இரண்டு காட்சிகளில் மட்டுமே தலைக்காட்டியிருந்தாலும் ஒய்.ஜி.மகேந்திரனின் முகபாவனை அருமை. திறமையான ஒரு நடிகரை வேஸ்ட் செய்துவிட்டார்கள்.தமன்னாவுக்கு இந்தப் படத்தில் காதலிப்பதை விட அதிகமாக அழுவதுதான் வேலை.காமெடியைப் பொறுத்தவரை கஞ்சாகருப்பு வரும் காட்சிகளைவிட பொன்னம்பலம் வரும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கிறது. பிரகாஷ்ராஜ் கோபத்தில் ஒவ்வொரு செல்போனாக உடைக்கும் காட்சிகள் சுவாரஸ்யம். படத்தில் பல காட்சிகள் குறிப்பாக பிரகாஷ்ராஜ் வரும் காட்சிகள் ஹரியின் முந்தைய படத்தை ஞாபகப் படுத்துகின்றன.இருந்தாலும் ஹரியின் விருவிருப்பான திரைக்கதை அவற்றை மறக்கடித்து விடுகிறது.

கடைசியா திருச்சிக்காரனான எனக்கு ஒரு சந்தேகம் "திருச்சியை மையப்படுத்தி எடுக்கும் எல்லாப் படங்களிலும் ஹீரோயினை ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவராகவே காட்டுவது ஏன்?"

No comments:

Post a Comment